வரணி 8ஆம் கட்டைப்பகுதியில் பொலிசார் திடீர் பரிசோதனை!

Tuesday, October 29, 20130 comments

வரணி எட்டாம் கட்டைச் சந்தியில் கொடிகாமம் பொலிசாரால்  பருத்தித்துறை -கொடிகாம வீதி மற்றும் மந்துவில் வீதியால் பயணிக்கும் வாகனங்களை பொலிசார் இன்று மாலை 6 மணியளவில் திடீர் சோதனைக்கு உட்படுத்தினர்.

  இவ் விடையம் தொடர்பாக  மேலும் தெரியவருவதாவது  கொடிகாமம் பொலிஸ்நிலையதத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் இன்று  மாலை 6 மணி தொடக்கம் கூடுதலான பிரதேசங்களில் இவ்  திடீர்  பரிசோதனை நிகழ்வு இடம்பெற்றது.

          இவ் நடவடிக்கை தொடர்பாக பொலிசாரை தொடர்பு கொண்டபோது “கொடிகாமம் பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பல பிரதேசங்களில் அண்மைக்காலமாக திருட்டுச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும்  மேலும் இன்று திருடர்கள் நடமாட்டம் இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து பொலிசாரால் இல் சோதனை மேற்கொள்ளப்பட்டதாவும் ’குறிப்பிட்டனர் .

   இவ்வாறு வரணி இயற்றாலையில்  நேற்றைக்கு முன்தினம் இரவு வேளையில் வீடு ஒன்றில் திருடர்கள் நுளைந்ததாவும்,பின் அவ் திருட்டுச்சம்பவம் முறியடிக்கப்பட்டதாவும் வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | varanytoday Template | varany mas Template
Copyright © 2013. varany2day - All Rights Reserved
Template Created by Creating Website Published by varany mas
by varany ICT unit +0094772237972