பழைய மாணவர் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும்

Sunday, April 20, 20140 comments

யாழ்.வரணி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் இன்று காலை 10 மணிக்கு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

பாடசாலை அதிபரும் பழைய மாணவர் சங்கத் தலைவருமான   க.மங்களேஸ்வரன்   தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் புதிய நிர்வாகத்  தெரிவு இடம்பெற்றது.


பாடசாலையின் அதிபர் உரையாற்றுகையில் கடந்த க.பொ.த சாதாரண, உயர்தரத்தில் மாணவர்களின் சித்தி பெறும் வீதம் அதிகரித்துள்ளதாக கூறினார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட யாழ்.பல்கலைக்கழக பொருளியற்பாட விரிவுரையாளரும் பாடசாலையின் பழைய மாணவருமான சி.உதயகுமார் உரையாற்றுகையில் பாடசாலை மாணவர்களின் கல்வியில் நாட்டம் குறைந்த மாணவர்கள் இணைபாட விதான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும் அப்போது அவர்கள் நல்ல நிலைமையை அடையமுடியும் என்று தெரிவித்தார்.

மேலும் பழைய மாணவர் சங்கத்தின் மேற்பார்வையின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட  மதில்கள் தொடர்பான வரவு செலவு விபரங்கள் பொருளாளரால் கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டது.

இன்றைய கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாகக் குழு விபரங்கள்


செயலாளர்
- சி.சுந்தரமூர்த்தி

உப செயலாளர் - த. தர்மசீலன்

பொருளாளர்- சி.ஜெகன்

உப பொருளாளர் - சி.நந்தகுமார்

கணக்குப்பரிசோதகர் - சி.சுதாகரன்


நிர்வாக உறுப்பினர்கள்-
கி.நிதர்சன்
சு.கருணாநிதி
சி்சிவசந்திரன்
க.குணரத்தினம்
கா்.இராஜமோகன்
பொ.வல்லிபுரநாதன்
சி.உதயவேல்முருகன்
க.பத்மகாந்தன்
கு.ஜெயாளன்
கு.சபேசன்
இ.நிரஞ்சன்









Share this article :

Post a Comment

 
Support : Creating Website | varanytoday Template | varany mas Template
Copyright © 2013. varany2day - All Rights Reserved
Template Created by Creating Website Published by varany mas
by varany ICT unit +0094772237972