வரணி இயற்றாலை கிராமசேவையாளர் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் மக்களுக்கு வாழ்வாதர கொடுப்பனவுத்திட்டம் ஒன்றை வேள்விஷன் (World Vision ) நிறுவனம் நடைமுறைப்படுத்த உள்ளதாக வரணி இயற்றாலையின் விவசாய சம்மேளனத் தலைவர் த.சின்னத்தம்பி அவர்கள் தெரிவித்தார் .
தோட்டச் செய்கை ,பால்மாடு வளர்த்தல் ,ஆடு வளர்ப்பு ,கோழி வளர்ப்பு ,கடைவியாபாரம் ,தையல் இயந்திரப்பயிற்சி ,தும்புத்தொழில் ,விளக்குமாறு தயாரித்தல் போன்ற முயற்களுக்கு வாழ்வாதாரத் திட்டங்களை குறித்த நிறுவனம் நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் , இத் திட்டங்களில் இணைந்து கொள்ளவிரும்பும் குடும்பஸ்தர்கள் தமது விண்ணப்பங்களை குடும்பத்தின் பூரணவிபரத்ததுடன் கிராம அலுவலகர் ஊடாக விண்ணப்பங்களை அனுப்பிவைக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.




.gif)

Post a Comment